இறைவா இதென்ன சோதனை சொந்த மண்ணில் தமிழர்கள் உடுத்த துணியில்லாமல், குளிக்க நீர் இல்லாமல் நோய் தீர்க்க மருந்தில்லாமல், கூரையில்லா வீடுகளில் விலங்குகள் போல் அடைபட்டு, அடிபட்டு வாயிருந்தும் ஊமைகளாய், அடிமைகளாய், உயிர் வாழும் தமிழர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்காமல் திரும்பத்தான் முடியுமா? இவ்வாறு கூறினார் விஜயன் சுப்பிரமணியம் எனும் உதவும் கரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்.
சிறையில் விதிமுறைகளை மீறி என்னை தனி அறையில் அடைத்து வைத்துள்ளதகவும் சிறை வளாகத்திற்குள் நடை பயிற்சி மேற்கொள்ளக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் முறையிட்டுள்ளார் .
ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் மருத்துவ மாது வாசிகன் தர்சிக்காவின் உடல் தாழ்க்கப்பட்ட இடத்தில் இருந்து நீதிமன்றக் கட்டளைக்கு ஏற்ப இன்று தோண்டி எடுக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இலங்கை அகதிகள் 219 பேருடன் கன டாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பலான "எம்.வீ. சன்.சீ.', கனேடிய கடற்பரப்பை அடைவ தற்கு முன் அமெரிக்க அல்லது கனேடிய கடலோர காவற்படையினரால் சுற்றிவளைக் கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்து வந்தனர். அமெரிக்கா மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி, தலிபான்களை விரட்டியடித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் இரண்டாம் தவணை பதவி நீடிப்புக்கு இலங்கை தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளது.
அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடு ஒன்றைத் தெரிவிப்பதற்காக புத்தல பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய பெண்ணை பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கற்பழித்ததாக 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேசத்தில் பரவலாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் ஒரு நாள் அடையாள கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
என் இதயத்துக்கு இனிப்பான என் தாய் தமிழ் உறவுகளே ,நம் தேச விடுதலைக்காக நம் மண்ணில் விதையான எண்ணற்ற மாவீரர்களின் கனவு ஈழ விடுதலை ஒன்றே , அக்னி குண்டுகள் மழையாய் பொலிந்த போதும் நம் மண்ணின் விடுதலைக்காக முள்ளிவாய்க்காலில் தங்களின் உயிரை தந்தவர்களின் கனவு ஈழ விடுதலை ஒன்றே ,
காவற்துறை திணைக்களத்தின் 4 முக்கிய பிரிவுகளான விசேட அதிரடிப்படை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் நிர்வகிக்கப்படுவதுடன் தன்னை தவிர வேறு எவருடைய உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டாம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேற்கூறிய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் காவற்துறையின் உயர் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாணத்தில் காணிகள் படையினரால் அபகரிக்கப்படுகின்றமையைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்.
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்களையும், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களையும் சந்திப்பதற்கான உரிமை எதிர்கட்சிகளுக்கு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசு சிறீலங்கா அரசை செல்லப் பிள்ளையாக நடத்தி வருகின்றது. அந்த துணிச்சலில்தான் ஜனாதிபதி மகிந்த, இந்திய மத்திய அரசின் இந்தியக் குழுவினரைத் தமிழர்கள் வாழும் பகுதிக்கு அனுமதிக்க மாட்டோம் எனக் கொக்கரித்திருக்கின்றார்.
ருகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யும்படியான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்கள் 6 பேரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வன்னியில் சிறிலங்கா படையினர் அமைத்து வரும் நிரந்தரப் படைத்தளக் கட்டுமானப் பணிகளுக்கு உதவுவதற்கான சீன இராணுவ அதிகாரிகள் சிலரும் சிறிலங்கா வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கொழும்பு விளக்கமறியல் கைதிகள் சிறைச்சாலையில் சக சிறைக் கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று தமிழ்க் கைதிகள் காயமடைந்தனர் என அறிய வந்தது. இக் கைதிகளின் றொக்சான் குஞ்சன் (வயது 36) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலை நிறுத்தப் போராடியமைக்காக பத்திரிகையாளருக்கான சிறப்பு விருதை "உதயன்', "சுடர்ஒளி' ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரிய ரும், மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர்களுள் ஒருவருமான என். வித்தியாதரன் பெறுகின்றார்.
வடபகுதியில் உள்ள மிகப்பெரும் வைத்தியசாலையான யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
புசல்லாவைப் பிரதேசத்தில் மீண்டுமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
தலைமன்னர் வீதியில் உள்ள இராணுவமுகாமிற்கு அண்மையில் வைத்து நேற்றுவியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்...
அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டு தோறும் ; ஜூலை மாதத்தை துயர் துடைப்பு மாதமாக அனுஸ்டித்து வருகிறது....
கறுப்பு யூலை ஒன்றுகூடல் நாளை youngstort gata வில் காலை 10 மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை நடைபெறவிருக்கின்றது...
இத்தாலி மக்களவை மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகளின் அனுசரணையுடன், இத்தாலி மேற்பிராந்திய இளையோர் அமைப்பு நடாத்திய ‘கலைச்சங்கமம் 2010'..
நம் தேசியத் தலைவரின் இலட்சியமான தமிழீழம் அமைய உலகத் தமிழர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு பெரிதும் இணைந்திருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்....
மோதலில் சிக்கிக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ருஹுனுப் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்ததாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது...
ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழு, போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா திரும்பியுள்ள ஐ.நாவின் இலங்கை...
12 ஆயிரம் போராளிகள் அரசிடம் சரணடைந்தனர் எனவும் இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. தற்போது 7,980 பேருக்கு மாத்திரம்...


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நான்காவது நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்துகொள்ள வேண்டும் என, அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவு நனவாகும் நல்ல அறிகுறி மேல்திசையில் தோன்றத் தொடங்கிவிட்டது.


