பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்தப் போராடியமைக்காக மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் வித்தியாதரனுக்கு சிறப்பு விருது!
திகதி: 24.07.2010 // தமிழீழம்
கடந்த ஆண்டில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலை நிறுத்தப் போராடியமைக்காக பத்திரிகையாளருக்கான சிறப்பு விருதை "உதயன்', "சுடர்ஒளி' ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரிய ரும், மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர்களுள் ஒருவருமான என். வித்தியாதரன் பெறுகின்றார். இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கைப் பத் திரிகை சம்மேளனம் ஆகியவை இணைந்து நடத்தும் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகையியல் விருது வழங்கும் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலை நிறுத்துவதற்காக பணியாற்றிய பத்திரிகையாளருக்கான சிறப்பு விருதை "உதயன்', "சுடர்ஒளி' ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும், மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர்களுள் ஒருவருமான என். வித்தியாதரன் பெறுகின்றார் என விருதுக்கான தெரிவுக்குழு நேற்று உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

அதேவேளை, கடந்த ஆண்டு முற்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட "த சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க பத்திரிகைச் சுதந்திரத்தை பேணியமைக்கான விருது பெறத் தெரிவாகியுள்ளார். அத்துடன், கடந்த ஆண்டு கடத்தப்பட்டு பின்னர் அவசரகாலச் சட்ட விதிகள், பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சுமார் இரண்டு மாத காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழப் பத்திரிகையாளர் வித்தியாதரன், தனது மனைவியுடன் பயணிக்கையில் தாக்குதலுக்கு இலக்கான பத்திரிகையாளர் உபாலி தென்னக்கோன், கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர் போத்தல ஐயந்த, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருபது வருடங்கள் சிறை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் ஆகியோர் பத்திரிகை சுதந்திரத்தைப் பேணுவதற்கு போராடியமைக்காக விசேட விருதுக்குத் தெரிவாகியுள்ளனர். இவர்களுள் தொடர்ந்தும் நாட்டைவிட்டு வெளியேறாமல் களத்தில் பணியாற்றுபவர் என்.வித்தியாதரன் என்பது குறிப்பிடதக்கது.

அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர் இவரை மறித்துத் தாக்கியபோது வெள்ளை வானில் வந்த ஒருவரும் சேர்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினார் என்று கூறப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியபோது அவர்கள் ஊடகவியலாளரது கைப்பையை பறித்துக்கொண்டு வெள்ளை வானில் தப்பிச் சென்றனர் என்று தெரிவிக் கப்படுகிறது. இதையடுத்து ஊடகவியலாளர் மன் னார் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டு பின்னர் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இராணு வத்தின் உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றும் உள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்“.வினோநோகராதலிங்கம் இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பேணிய துணிச்சலான பத்திரிகைக்கான விருது கடந்த ஆண்டு "உதயன்' நாளிதழுக்கு வழங்கப்பட்டபோது, அதன் ஆசிரியர் என்ற முறையில் வித்தியாதரனே அந்த விருதைப் பெற்றுகொண்டார். "உதயன்',"சுடர்ஒளி' ஆகிய பத்திரிகைகளின் ஸ்தாபக கால ஆசிரியர் பீட நிர்வாகியான வித்தியாதரன், அப்பத்திரிகைகள் மிகுந்த நெருக்கடிகளை எதிர் கொண்ட வேளையில், சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் அவற்றை எதிர்கொண்டு, அப்பத்திரிகைகள் நின்று நிலைத்து நீடித்து வெற்றியுடன் வெளிவருவதற்கு பின்னணியில் செயற்பட்டவர். கடந்த ஏப்ரல் மாதம் மேற்படி நிறுவனங்களின் பணியில் இருந்து தமது சுயவிருப்பின் பேரில் விலகிக் கொண்ட வித்தியாதரன் தற்போது சுயாதீனமாக இயங்கி வருகிறார்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்திலும், பின்னரும் இலங்கை அரசுத் தரப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த அனைத்து அமைதிப் பேச்சுக்களின் போதும் பிரசன்னமாகி செய்தியாளராக கடமையாற்றியவர் இவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், இலங்கையின் ஐனாதிபதிகளான ஆர்.பிரேமதாஸ, சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஐபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைத் தனித்தனியாகப் பல தடவைகள் சந்தித்து பேட்டி கண்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விருது வழங்கும் விழா எதிர்வரும் செவ்வாய்கிழமை 27ஆம் திகதி கல்கிசை மவுண்லவேனியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.