Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தமிழர்கள் என்றால் பயங்கர வாதிகள்: போரட்டம் என்றால் பயங்கரவாதச் செயல்!

.

அமெரிக்காவில் ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக முடிகிறது. இங்கிலாந்தில் ஒரு இந்தியர் பிரதமராக முடிகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு தமிழர் இன்னும் பிரதமராக முடியவில்லை. ஒரு தெலுங்கர் பிரதமராகியிருக்கிறார். இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட சீக்கியர்கூட பிரதமராகியுள்ளார். ஆனால் எட்டுக்கோடி மக்கள் கொண்ட தமிழ் இனத்தில் இன்னும் ஒருவர் பிரதமராக முடியவில்லை. இலங்கையில்கூட ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ முடியவில்லை. தேர்தலில் தோற்ற, ஒரு எம்.பி கூட ஆதரவு அற்ற ரணிலை ஜனாதிபதியாக நியமிப்பார்கள். ஆனால் 18 எம்.பிகள் கொண்ட சம்பந்தர் ஐயாவை ஜனாதிபதியாக நியமிக்க யோசனைகூட செய்ய மாட்டார்கள். ஏனெனில் சம்பந்தர் ஐயா ஒரு தமிழர் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? பத்துவருடமாக இந்திய பிரதமராக இருப்பவர் “ஒரிசாவை தமிழன் ஆளலாமா? கோயில் சாவியை திருடிய தமிழன்” என்று பேசலாம். அவரை இனவாதி என்று கூறமாட்டார்கள். ஆனால் “ஒரு தமிழனே தமிழனை ஆளவேண்டும்” என்று கூறும் சீமானை இனவாதி என்கிறார் காங்கிரஸ் தலைவர். என்னே கொடுமை இது?