Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கண்டியில் திடீர் சுற்றிவளைப்பு: 12 இந்தியர்கள் கைது – காரணம் என்ன?

.

 

கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் திங்கட்கிழமை இரவு கண்டி ஹல்லோலுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இணைய குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்திய பிரஜைகள் குழுவொன்றை கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும், இணையக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 இந்திய பிரஜைகளைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது, ​​22 கணினிகள், 4 லப்டப்கள், 50க்கும் மேற்பட்ட அதிநவீன தொலைபேசிகள், 11 ஏடிஎம் அட்டைகள் மற்றும் பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாதம் 300,000 ரூபாய்க்கு வீட்டை வாடகைக்கு பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் இணையம் மூலம் சர்வதேச அளவில் பந்தயம் கட்டும் தொழிலை நடத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இவர்கள் உணவு தயாரிக்க இரண்டு இந்திய சமையல்காரர்களை வைத்துள்ளனர். மேலும், குழு உறுப்பினர்கள் எவரும் பகல் நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.