“தெஹிவளை மிருகக்காட்சிசாலையை மூடுங்கள்“: சமூக வலைத்தளங்களில் ஆரம்பிக்கும் புரட்சி
.

அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் அரசராங்கம் முன்னெடுத்து வரும் சில திட்டங்களால் இலங்கையில் வளங்கள் பறிபோகின்றன. சில இடங்கள் பராமரிப்பின்றி அழிந்துவருவதையும் கண்கூட பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக இலங்கையில் புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலையான கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பற்றிய பேச்சுக்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 3 ஆம் திகதியுடன் 88 ஆம் ஆண்டை பூர்த்திசெய்திருந்த நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் மிருகக்காட்சிசாலை பேசுபொருளாக மாறியுள்ளமையும் கவனிக்கத்தக்க விடயமாகும்.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் #Nomoredehiwalazoo #ShutdownDehiwelaZoo என்ற ஏஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றது.
பிரபல ஒட்டாரா பௌண்டேசனனின் உரிமையாளர் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள் இது தொடர்பிலான கருத்துக்களுக்கு குரல் எழுப்பி வருகின்றனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.
அங்கு வாழும் மிருகங்கள் தனிமையாக இருப்பதோடு மிகவும் சோர்வாகவும் மனவுளைச்சலுடனும் இருக்கின்றன.
இதற்கு சரியான காரணம் என்ன என்பது தொடர்பில் சரியான விளக்கம் எதுவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் இது வரை தெரிவிக்கவில்லை.