Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க சற்று தாமதமாகும்

.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதி எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க “மவ்பிம” நாளிதழுக்கு தெரவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேவையான முதற்கட்ட கலந்துரையாடல்கள் தற்போது பொறுப்புடைய தரப்பினருடன் நடத்தப்பட்டு வருவதாகவும் அதன்படி, நிச்சயமாக எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ரே்தல் இடம்பெறும் திகதியை நாடு அறிந்து கொள்ள முடியும் என ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வெளிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் திகதியை நாளையதினத்துக்கு (26) முன்னர் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதற்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலை அவதானிப்பது தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பலமுறை கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

அதன்படி, பொதுநலவாய சபையின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் நேற்று (24) கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் அவர்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனைய சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தேர்தலை ஜூலை 17ஆம் திகதி அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் ஜனாதிபதி தேர்தல் திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 10ஆம் திகதி அறிவித்திருந்தது.

ஆனால் இந்த மூன்று நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த இரண்டு நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவித்து ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகளை இலகுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பஃரல் அமைப்பு (Pafferal) கடந்த 23ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (25) கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.