Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; நிராகரிக்கப்பட்ட அனுமதி

.

 

நடிகர் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்மலை ஜீ கார்னரில் தொடருந்து நிலையத்திற்குச் சொந்தமான இடத்தில் இந்த மாநாடு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, குறித்த இடத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் வாடகைக்குத் தருமாறு கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு சிறுகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரும் தமது கட்சியின் முதல் மாநாட்டைத் திருச்சியில் நடத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.