Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உக்ரைனில் போராடும் இலங்கையர்கள் பற்றி ஏன் பேசுவதில்லை?: ஊடகவியலாளர்களிடம் ஆதங்கப்பட்ட ரசிய தூதுவர்

.

உக்ரைனுக்காக போராடும் இலங்கையர்களைப் பற்றி நீங்கள் ஏன் கேள்வி கேட்பதில்லை? என இலங்கைக்கான ரசிய தூதுவர் லெவன் ட்ஜகார்யன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவை பற்றி மட்டுமே கேட்கிறீர்கள், உக்ரையின் குறித்து அமைதியாக இருக்கிறீர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது ரசியாவில் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதன்போது பதிலளித்து பேசிய அவர்,

இந்த முக்கியமான விடயத்திற்கு தீர்வு காண்பதற்காக தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் கூட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இணைந்து பணிகளை செய்து வருகின்றோம்.

குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், உக்ரைனுக்காக போராடும் இலங்கையர்களைப் பற்றி நீங்கள் ஏன் கேட்பதில்லை? ரஷ்யாவை பற்றி மட்டுமே கேட்கிறீர்கள், உக்ரையின் குறித்து அமைதியாக இருக்கிறீர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், உக்ரைனில் போராடும் இலங்கையர்கள் பற்றி நீங்கள் உங்கள் கேள்வியை புதுடில்லியில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு அனுப்பலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.