Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவு வழங்க தயார்

.

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட கடனுக்கு சமப்பட்ட தொகையை கொள்ளையடிப்பதற்கு நிஸ்ஸங்க சேனாதிபதியின் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை தற்போது வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் தகவல்கள் வெளியானதையடுத்து நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு 9 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறு துப்பாக்கிகள் வழங்கப்பட்டமைக்கான காரணங்களை ஆராய்ந்தபோது மேலும் பல வரப்பிரசாதங்கள், கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்களும் வெளிவந்துள்ளன.

இப் பின்னணியில், சர்வதேச கடற்பரப்பில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கைக் கடற்படையினருக்கு கிடைத்து வந்த ஆயிரக்கணக்கான மில்லியன் டொலர் வருமானம் கோட்டாபய ராஜபக்சவின் நண்பரான நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

இதனால் நாடு இழந்த வருமானம் 2015-2019 ஆண்டுகளில் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் தொகைக்கு சமமானது என தெரியவந்துள்ளது.

2015-2019 க்கு இடையில் இறையாண்மைப் பத்திரங்களிலிருந்து 12,050 மில்லியன் டொலர்கள் எரியும் வட்டிக் கடன், நாட்டை திவால் நிலைக்குள் தள்ளுவதற்கு ஒரு முக்கிய காரணியாக காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கை கடற்படையினரிடம் இருந்து ஏறக்குறைய 11,500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு கொமாண்டர் நிஸ்ஸங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அவன்ட்கார்ட் கடத்தல் தொடர்பில் வெளியான பிரத்தியேக தகவல்களை வெளிப்படுத்தும் காணொளி ஒன்றை ஐரிஎன் எனப்படும் அரச ஊடக நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.