Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஜானகி முன் குற்ற உணர்ச்சியால் கலங்கி நின்ற வைரமுத்து!

.

ஜானகி முன் குற்ற உணர்ச்சியால் கலங்கி நின்ற வைரமுத்து! வாழ்க்கையை திருப்பி போட்டதா இந்த பாடலில் ஒற்றை வார்த்தை?
இதுபோல் வைரமுத்து எழுதிய ஒரு பாடலில் இடம்பெற்ற வார்த்தையை நீக்கிவிடுமாறு ஜானகி கேட்டும் அதை வைரமுத்து நீக்க மறுத்து, பின்னர் குற்ற உணர்ச்சியால் அவர் முன் கலங்கி நின்றதாக கூறியுள்ளார். இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில், 1982-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காதல் ஓவியம்'. இந்த படத்தில், கண்ணன் ஹீரோவாக நடிக்க, ராதா கதாநாயகியாக நடித்திருந்தார். உணர்வு பூர்வமான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், வைரமுத்து மொத்தம் 6 பாடல்களை எழுதி இருந்தார் . அதில் ஜானகி "நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே... உந்தன் ராஜராகம் பாடும் நேரம்" என்கிற பாடலை சோலோவாக பாடி இருந்தார். இந்த பாடலில், "அமுதகானம் நீதரும் நேரம்... நதிகள் ஜதிகள் பாடுமே... விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகி போகுமே" என்கிற வரி இடம்பெற்றிருந்தது. இதில் விதவை என்கிற வார்த்தையை மட்டும் நீக்க முடியுமா என பலமுறை ஜானகி கேட்டும், படத்தின் கதைக்கு இந்த வரிகள் ஒத்து போவதால் இந்த வரியை நீக்க முடியாது என கண்டிப்பாக கூறி விட்டாராம். பின்னர் இந்த பாடலை அவர் பாடிய சில தினங்களையே ஜானகியின் கணவர் இறந்துபோய் உள்ளார்.