Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பிரான்ஸில் அரசியல் நெருக்கடி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் பதவி பறிப்பு

.

பிரான்சில் எதிர்க்கட்சியினர் இன்று ஆளும் அரசாங்கத்தை வீழ்த்தி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி சட்டமியற்றுபவர்கள் பிரதம மந்திரி மைக்கேல் பார்னியர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒன்றிணைந்தனர்.நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை 331 வாக்குகள் கிடைத்தன.இதன் தொடர்ச்சியாக பிரதமர் பார்னியர் தனது ராஜினாமா மற்றும் அவரது அரசாங்கத்தின் ராஜினாமாவை விரைவில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமருடன், ஜனாதிபதி மக்ரோனும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், அரசியல் நெருக்கடியில் இருந்து எளிதாக வெளியேற முடியாது

கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.பிரான்ஸ் இப்போது ஆழ்ந்த அரசியல் நிச்சயமற்ற காலகட்டத்தை எதிர்கொள்கிறது, இது ஏற்கனவே பிரெஞ்சு இறையாண்மை பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீட்டாளர்களை பயமுறுத்துகிறது.மக்ரோன் இப்போது வேறொரு பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.சனிக்கிழமையன்று நோட்ரே-டேம் கதீட்ரலை மீண்டும் திறக்கும் விழாவிற்கு முன் ஒரு பிரதமரை பெயரிட வேண்டும் மக்ரோன்.எந்தவொரு புதிய பிரதமரும் 2025 வரவுசெலவுத் திட்டம் உட்பட, பிளவுபட்ட பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதாக்களை பெறுவதில் பார்னியர் எதிர்கொண்ட அதே சவால்களை எதிர்கொள்வார்.அதே நேரத்தில் ஜூலைக்கு முன் புதிய நாடாளுமன்றத் தேர்தல் நடத்த முடியாது.