Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் புதிய நகர்வு. வேட்பாளர் யார், கட்சியின் ஆதரவு யாருக்கு?

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வரும் நிலை

ஜனாதிபதி தேர்தலில் விமல்-உதய கம்மன்பில உருவாக்கிய கட்சியின் ஆதரவு யாருக்கு?: ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் புதிய நகர்வு.

ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் யார், அல்லது கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது தற்போது அரசியல் களத்தில் அதிகளவில் எழுந்து வரக் கூடிய கேள்வியாகவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, பேராசிரியர் சன்ன ஜயசுமண உள்ளிட்டவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சர்வ ஜனபலய கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கட்சி கை விரல் ரேகையை சின்னமாகக் கொண்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு சர்வ ஜனபலய என புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து ஒரு குழுவாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறான பின்னணியில், ரணிலின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மட்டுமே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும் எனவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அதிகமாக காணப்பட்டு வருகிறது.