Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

நெதர்லாந்தின் லாண்ட்கிறாவ்- இரண்டாவது தடவையாக இனிய விழாவாய் முரசமதின் தெருவிழா,

முரசம் குழுவானது ஒவ்வொரு விடயங்களையும் பக்குவமாய் பார்த்துப்பார்த்து ஒழுங்கு செய்திருந்தமை பாராட்டத்தக்கது.

நெதர்லாந்தின் லாண்ட்கிறாவ் நகரில் 26.05.2024 அன்று இரண்டாவது தடவையாக இனிய விழாவாய் முரசமதின் தெருவிழா, பெருவிழாக்கோலம் பூண்டது. பாரிஸ் மண்ணின் கலைஞர்கள் ஒன்று கூட, மக்களின் ஆதரவோடு பாரம்பரிய எம் பறை ஒலியை தமிழர்களின் அடையாளப் பறையை அந்த பெரும் திடலை சுற்றி அரங்கம் அதிரமுரசத்தின் பெருவிழா ஆரம்பமானது .பறை இசை தந்த பாரிஸ் கலைஞர்களுக்கு எம் நன்றிகள். ஆடல், பாடல்கள் என சிறியவர்முதல் பெரியவர்வரை அரங்கத்தை அழகாய் அலங்கரித்திருந்தனர். முரசத்தின் சிறப்பம்சமாக  பாரீஸ் கலைஞர்களின் "சிந்திக்க சிரிக்க" நாடகம் ஒன்று பன்முகக்கலைஞர் திரு. மயிலை இந்திரன் அவர்களும், கலைஞர்  திரு. இரவி அவர்களும் சிறப்பாய் வெளிக்கொணர்ந்து எங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்கள். புலம் பெயர்வாழ்வியலும்

வெளிநாடு வர ஆசைப்படுபவர் பற்றிய எண்ணங்களையும் தத்ரூபமாய் அவர்கள் பாணியில் எம்மை சிந்திக்க வைத்தமையும். நகைச்சுவையோடு காத்திரமான கருத்துக்களை அந்த மேடையில் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு எம் வாழ்த்துகளும் , நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இன்னுமொரு அம்சமாய் "சிகரம் தொட்ட தமிழன்" விருதுகட்டிக்கலைஞரும் , ஆலயத்தொண்டர்,கலைகளை நேசிப்பவர், கலைகளை ஊக்குவிப்பருமான திரு. குகன் செல்வராஜா அவர்களுக்கு முரசம் குழுவினரால் வழங்கப்பட்டது. தன்கடின முயற்சியினால் முன்னேற்றம்  கண்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்  திரு . குகன் செல்வராஜாவை முரசம் குழு வாழ்த்தி மகிழ்கிறது. இன்னு மொரு சிறப்பம்சமாய் Sla நிறுனத்தின் பெரும் பணி "போசாக்கு உணவுத்திட்டம்" தாயகத்தில் ஆரம்பித்து  முல்லைத்தீவில் இருக்கும்

ஆரம்பப்பாடசாலையில் சிலவற்றில் தங்கள் பணியை மேற்கொண்டிருப்பதோடு அப்பணியின் செயற்பாடுகளை அன்றைய விழாவில் ஒளித்திரை மூலம் காண்பித்தும் இருந்தார்கள். உண்மையில் பாராட்டத்தக்க விடயம். புலம் பெயர்ந்தாலும் எம் மக்களின்மீதும் கரிசனம் கொண்டு பசி போக்கும் sla நிறுவனத்திற்கு நன்றி கலந்த பாராட்டுகள். அடுத்த அம்சமாய்  இன்னிசை வார்ப்பாய் கானமழை கொண்டிருக்க இயற்கையின் சீரற்ற நிலை எம்மை தடுத்தி நிறுத்தியது. ஆனபோதிலும் நிகழ்சிகளை சீராக நாம் கொண்டு சென்றிருந்தோம். பொறுப்போடு செயலாற்றிய அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி.

முரசம் குழுவானது ஒவ்வொரு விடயங்களையும் பக்குவமாய் பார்த்துப்பார்த்து ஒழுங்கு செய்திருந்தமை பாராட்டத்தக்கது. 

முரசம் –நெதர்லாந்து.