Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பயந்து ஒதுங்குகிறாரா சஜித்?: அனுரவின் பின்னால் ரணில்.

.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இருவருக்கும் இடையே இடம்பெற தீர்மானிக்கப்பட்டிருந்த விவாதத்தில் சஜித் கலந்துக் கொண்டிருக்கவில்லை.

முதலில் பொருளாதார விவாதம் மற்றும் அதன் பின்னர் தலைமைத்துவ விவாதம் என்பன விவாதம் தொடர்பிலான சஜித் பிரேமதாசவின் கட்டாய நிபந்தனை என்பதால் நேற்று (06) இடம்பெற தீர்மானிக்கப்பட்டிருந்த விவாதத்தில் சஜித் கலந்துக் கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ITN) கடிதமொன்றின் மூலம் நேற்று மாலை அறியப்படித்தியிருந்தார்.

தென்னிலங்கை அரசியலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இடையிலான விவாதம் தொடர்ச்சியாக பேசு பொருளாக அமைந்திருந்தது.

இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி நாட்களை வழங்கி அரசியல் மேடைகளில் பேச்சுக்களை நிகழ்த்தி வந்தனர்.

இந்நிலையில், தனது கட்சி சார்பில் விவாதம் தொடர்பில் சில நிபந்தனைகளை முன் வைத்திருந்தோம் எனினும், தேசிய மக்கள் சக்தி எந்தவிதமான கலந்துரையாடலிலும் ஈடுபடாமல் சுயாதீன தொலைக்காட்சியின் அறிவித்தலின்படி, விவதாத்திற்கு தயார் எனத் தெரிவித்ததாக நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நாடகமொன்றை அரங்கேற்றி வருகிறது, இந்த நாடகத்துக்கு பின்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்றாரா என்ற சந்தேகம் தற்போது எங்களுக்கு எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இரு விவாதங்களும் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு இன்னும் வாய்ப்புகள் உண்டு எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 6ஆம் திகதியின் பின்னர் எந்தவித விவாதத்துக்கும் தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.