Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்

.

 

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, தியகல பிரதேசத்தில் தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (11) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனின் சாரதியும் மேலுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதிவேகமாக பயணித்த வேன் சறுக்கி எதிர்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வேனின் சாரதியும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றுமொருவரும் சிக்கிக் கொண்டதையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகள் கடும் முயற்சியுடன் வேனின் கதவை திறந்து காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தில் பேருந்தும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மழை பெய்து வருவதால் அவ்வழியாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கினிகத்தேன பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.