Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

அனுர ஜனாதிபதியானாலும் பொருளாதாரம் மீளாது

.

 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் இலங்கைத் தீவின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மீண்டெழ சிறிது காலம் எடுக்கும் என கூறிய அவர், வீட்டு பொருளாதாரத்தை உரியமுறையில் நிர்வகிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”தற்போது ஐக்கிய தேசியக் கட்சி செயலிழந்துவிட்டது. பெரமுனவையும் அவ்வாறே கருதுகிறோம். எல்லோராலும் முடியாது என்றால், அவர்களால் அதைச் செய்ய முடியாது.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் விஸ்வகர்மாவின் பலத்தினாலும் மந்திர சக்தியினாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றுவதற்கு வழியில்லை.

பால் தேநீருக்குப் பதிலாக தேனீர் குடித்து தேவையற்ற செலவுகளைக் குறைத்து வீட்டுப் பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிப்பது போன்றாவது நாம் கடின அர்ப்பணிப்புடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபடுவோம்.” என்றார்.