Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அனுரவின் பொலிஸ் படையால் அதிர்ந்த அரசாங்கம்: முடக்குவதற்கு தீவிர ஆலோசனை – பல ஊழல்கள் அம்பலமாகும்

.

 

தேசிய மக்கள் சக்தியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஒய்வு பெற்ற பொலிஸ் கூட்டமைப்பினால் அரசாங்கத்துக்குள் பல்வேறு குழப்பங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர் என விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான உத்தரவுகள் புலனாய்வுத்துறைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் – மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான பல ரகசிய தகவல்கள் இந்தக் குழுவில் உள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளதால் இது தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சிக்கு பாரிய பின்னடைவையும் இழுக்கையும் ஏற்படுத்தும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்ன (ஓய்வு) மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் (ஓய்வு) சானி அபேசேகர ஆகியோர் தலைமையிலேயே தேசிய மக்கள் சக்தி இந்த படைப் பிரிவை உருவாக்கியுள்ளது.

இவர்களது செயல்பாடுகளை தொடரவிட்டால் அது அரசாங்கத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்களை முடக்கும் பல்வேறு நகர்வுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.