Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ரணிலை ஆதரிக்க ராஜிதவின் ரகசிய நகர்வு: கைகோர்க்கும் 100 எம்.பிகள்?

.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நூறு எம்.பி.க்கள் கொண்ட கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அவர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜித சேனாரத்ன, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவும் ரணில் விக்ரமசிங்கவும் ஒரே நிலைப்பாட்டை கொண்டவர்கள்.

நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு தானும் தனது குழுவினரும் ஆதரவளிப்பதாகவும் தன்னை துரோகியாகக் கருத வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க ராஜித சேனாரட்ன மேற்கொண்டுவரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜுலை மாதம் ரணில் விக்ரமசிங்க தாம் வேட்பாளராக போட்டியிடுவது குறித்த அறிவிப்பை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளார்.

அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுவரும் ராஜித சேனாரட்ன மற்றும் நிமல் லான்சாவின் கூட்டணிகள் குறித்த வெளிப்படையான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.