Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

‘இதோ ஒரு நற்செய்தி’; மூன்று புதிய அமைச்சர்கள் நியமனம்

.

 

‘இதோ ஒரு நற்செய்தி’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை 26ஆம் திகதி இலங்கை மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ளார்.

இது தொடர்பிலான பிரசாரங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் பின்புலத்தில் மேலும் மூன்று பேர் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரையை தொடர்ந்து அமைச்சரவையில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி சுயாதீனமாக செயல்பட்டுவரும் மூவரே இவ்வாறு அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது.