Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ரஷ்யா – உக்ரெய்ன் போர்: இலங்கையைச் சேர்ந்த 17 பேர் உயிரிழப்பு

.

 

இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையில் போர் நடந்து வருகின்றது.

இதில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தத்தமது இராணுவப் படையின் பலத்தை அதிகரிப்பதற்காக இரு நாடுகளுமே வெளிநாடுகளிலிருந்து தமது இராணுவத்துக்கு ஆட்களை இணைத்து வருகிறது.

அதிலும் ரஷ்யா, நல்ல சம்பளம், பாதுகாப்பு, உதவியாளர் பணி என பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி இராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.

அவ்வாறு சேர்க்கப்படுபவர்களுக்கு வலுக்கட்டாயமாக இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் விருப்பம் இல்லாமாலே போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு அனுப்பப்படுபவர்கள் உக்ரெய்னின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் செத்து மடிவது தொடர் கதையாகிவிட்டது.

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களும் ரஷ்ய இராணுவப் படையில் சேர்கின்றமை தொடர்பில் ஏகப்பட்ட விவாதங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்யா – உக்ரெய்ன் போரில் இலங்கையைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இலங்கை ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.