Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சைபர் கிரைம் 31 சீன பிரஜைகள் கைது! 30 கணினிகள், 80க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டது.

இணையக் குற்றவாளிகள் தாங்கள் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் தங்கக்கூடிய பிரதேசமாக நீர்கொழும்பு!

சைபர் கிரைம் மையமாக மாறியுள்ள நீர்கொழும்பு: மேலும் 31 வெளிநாட்டவர்கள் கைது

நீர்கொழும்பு – கொக்கபடுவ பகுதியில் உள்ள மற்றுமொரு ஹோட்டலை சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் சந்தேகத்தின் பேரில் 31 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், அவர்களிடம் இருந்து 30 கணினிகள் மற்றும் 80க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சீனப் பெண்ணும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வெளிநாட்டு பயண பதிவுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 நாட்களாக நீர்கொழும்பு பகுதியில் உள்ள நான்கு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 150 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பாகிஸ்தான், நைஜீரிய, நேபாள, மலேசிய, இந்திய, பங்களாதேஷ் மற்றும் சீன பிரஜைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இணையக் குற்றவாளிகள் தாங்கள் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் தங்கக்கூடிய பிரதேசமாக நீர்கொழும்பை அடையாளப்படுத்தியிருப்பது கடந்த சில நாட்களாக நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இருந்து தெரிகிறது.

தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் குறித்த தகவல்களை வீட்டு உரிமையாளர்கள் வேண்டுமென்றே பொலிஸ் நிலையங்களுக்கு வழங்காத காரணத்தினால் குற்றவாளிகள் இங்கு தங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.