Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சேற்றை வீசி திசைக்காட்டியை வீழ்த்த முடியாது: மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்வரை சலுகைகள் வழங்கப்படும்

.

 

திசைக்காட்டி மீது கற்களையோ அல்லது சேற்றையோ வீசி வீழ்த்திவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவதூறுகளின் வெள்ளத்தை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது என்பது உறுதியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், 21ஆம் நூற்றாண்டில் எமது நாடு ஒரு புதிய மருமலர்ச்சிக்கான பாதையில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மாத்திரமன்றி, நாட்டின் புதிய பாய்ச்சலுக்காக அனைத்து சக்திகளும் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பமாக இதனைக் கருதுமாறும் அவர் கோரியுள்ளார்.

மேலும், மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வரை சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க மக்கள் காலூன்றி நிற்கும் வகையில் நாட்டில் உற்பத்திப் பொருளாதார நிலைமை உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.