Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

‘கறுப்பு ஜூலை’க்கு விசாரணை தேவை; குட்டிமணி,தங்கத்துரையின் உடல்கள் எங்கே?

.

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை ,குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும் .அத்துடன் 1983 ஜூலை இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்த அவர் மேலும் பேசுகையில்,

ஜூலை மாதம் தமிழர்களுக்கு கறுப்பு மாதம்.இந்த மாதத்தில் தான் வெலிக்கடை சிறையில் எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை ,குட்டிமணி உட்பட 58 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் இனவாதம்,இன அழிப்பு ,வன்முறை என்பன வெலிக்கடை சிறையில்தான் ஆரம்பித்தன. இந்த மாதத்தில் இன்றைய நாளான 25 ஆம் திகதி (நேற்று )தான் வெலிக்கடை சிறைப் படுகொலை இடம்பெற்றது.

இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை இல்லை.சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களை எங்கே புதைத்தார்கள் என்று கூடத் தெரியவில்லை. படுகொலையில் ஈடுபட்டவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. எனவே 1983 ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பித்து 27 ஆம் திகதிவரை நடந்த இனப் படுகொலையை அரசு விசாரணை செய்ய வேண்டும். சிறையில் படுகொலை செய்யப்பட்டவர் எமது தலைவர்களை எங்கே புதைத்தார்கள் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் என இந்த சபையில் அரசிடம் வேண்டுகின்றேன்.

பிந்துனுவெவ சிறையிலும் 26 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள் .களுத்துறை சிறைப்படுகொலை.இவ்வாறு இந்த நாட்டில் பல இடங்களில் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதற்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்றார்.