Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஜனாதிபதி வேட்பாளர் யார்?: மொட்டுக் கட்சி இன்று தீர்மானம்

.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானிக்க கட்சியின் அரசியல் சபை இன்று (29ஆம் திகதி) கூடுகின்றது.

கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச தலைமையில் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களை பரிசீலித்து அரசியல் சபை இறுதித் தீர்மானம் எடுக்கும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தக்கூடிய, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய, இளைஞர்கள் எதிர்பார்க்கும் ஒரு வேட்பாளரை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணி தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சஜித்தின் வெற்றிக்காக உருவாக்கப்படும் அரசியல் கூட்டமைப்பை எதிர்வரும் எட்டாம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இந்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியடையும் எனவும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.