Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமனம்.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமனம்.

தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து தற்போதுள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திவிசாரணைகள் மேற்கொள்ளப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று திங்கட்கிழமை(22) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தியத்தலாவ கார் பந்தயத் திடலில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

Foxhill 2024 கார் பந்தயத்தின் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் சிலர் தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

போட்டியில் பங்கேற்ற காரொன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து சம்பவித்தமை குறிப்பிடத்தக்கது.