Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

காரில் களமிறங்கும் விஜயதாச; முக்கிய சகாவான மைத்திரி கைவிட்டாரா?

.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச கார் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அத்துருகிரியவிலுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் சின்னம் அறிவிக்கப்பட்டது.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் எவரும் கலந்து கொள்ளாத நிலையில் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிப்போர் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுதந்திரக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி விபச்சார குழுவொன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

அவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்.

கட்சியையும் அழித்து 40 வருடங்களாக நாட்டை அழித்த தலைவரால் எவ்வாறு சாத்தியமாகும்? ஏமாறும் அளவுக்கு மக்கள் மனநோயாளிகள் அல்ல” என விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.