Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மிதக்கும் வாக்குகளில் அவதானம்: ரணிலின் புதிய உத்தி

.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கம்பஹா மாவட்டத்தில் அனைத்து ஆசனங்களையும் உள்ளடக்கிய பல கட்சிகளின் பங்கேற்பின் மூலம் ஜனாதிபதி தேர்தல் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஜனாதிபதிக்கு ஆதரவான சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் இன்னும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாது இருக்கும் மிதக்கும் வாக்காளர்கள் (floating Votes) மீது அதிக அவதானம் செலுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, சுமார் 40 இலட்சம் பேர் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

அதன்படி, இவ்வாறான மிதக்கும் வாக்குகள் மீது அதிக அவதானம் செலுத்துமாறு, ரணில் விக்கிரமசிங்க மூலம் தனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் மிதக்கும் வாக்குகளை இலக்கு வைத்து விசேட பிரச்சார நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.