Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

80 வயது மூதாட்டி கழுத்து நெரித்து கொலை ; சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

.

80 வயது மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிவான் ராஜிந்த ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் மருமகனுக்குச் சொந்தமான விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் சம்பவதினத்தன்று கொட்டாவை – மாலம்பே வீதியில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் தனிமையிலிருந்த மூதாட்டியிடம் 10 ஆயிரம் ரூபா பணம் கோரியுள்ளார்.

இந்நிலையில், குறித்த மூதாட்டி பணம் தருவதற்கு மறுப்பு தெரிவித்ததால் சந்தேக நபர் மூதாட்டியின் காதிலிருந்த தோடுகளைக் கழற்ற முயன்றுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.