Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

உலக உணவுத் திட்டத்தின் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியமைக்கு அமைச்சர் விளக்கம்.

பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் அரிசி சிறுவர்களின் நுகர்வுக்கு தகாதது.

உலக உணவுத் திட்டத்தின் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியமைக்கு அமைச்சர் விளக்கம்.

பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் சிறுவர்களின் நுகர்வுக்கு தகாத அரிசியானது உலக உணவுத் திட்டத்தினால் (World Food Programme – WFP) வழங்கப்பட்டதே தவிர, அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கூறியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்துக்கு உதவும் வகையில், குறித்த அரிசிப் பொதிகள் உலக உணவுத் திட்டத்தினால் மேலதிகமாக வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அரச நிதியில் விநியோகிக்கப்படும் உணவு குழந்தைகள் உண்பதற்கு ஏற்றது என்பதை அரசு உறுதி செய்கிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினூடாக கல்வி நிலையங்களுக்கு அரிசி கையிருப்புக்காக வழங்கப்பட்ட பின்னரும் மாகாண பொது சுகாதார பரிசோதகர்களினால் (Provincial Public Health Imspectors – PHIS) வழக்கமான தர பரிசோதனைகள் செய்யும்படி ஆலோசனை வழங்குவதாக அமைச்சர் பிரேமஜெயந்த தெரிவித்தார்.

அரசாங்கமானது, ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூபாய் 110 வீதம் ஒதுக்குகிறது. அதுமட்டுமில்லாமல் வேறு ஆதாரங்களிலுமிருந்தும் நிதி கிடைக்கப் பெறுகிறது.

இதன் விளைவாக, உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியுடன் அரசாங்கத்தின் நிதியுதவியில் கிடைக்கும் அரிசியை கலக்க வேண்டாம் என அமைச்சர் உத்தரவிட்டார்