Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தேர்தல் முடிவுகளில் அநுர முன்னிலை: நாட்டை வழிநடத்த அமைச்சர் சப்ரி வாழ்த்து

.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை முழுமையாக மதிக்கின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

அவர் தனது சமூக ஊடகபதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நீண்ட மற்றும் கடினமான தேர்தல் பிரச்சாரத்தின் பின்னர் தேர்தல் முடிவுகள் தற்போது தெளிவாக உள்ளன.

நான் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தாலும்,மக்கள் தங்கள் முடிவை எடுத்துள்ளனர்.

நான் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை முழுமையாக மதிக்கின்றேன்.

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பினை மதிப்பது முக்கியமானது நான் அதனை செய்கின்றேன்.

நான் அனுரகுமாரதிசநாயக்கவிற்கும் அவரது குழுவினருக்கும் எனது நேர்மையான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டிற்கு தலைமை தாங்குவது சாதாரண விடயமில்லை,இலங்கைக்கு மிகவும் அவசியமாக உள்ள அமைதி வளம் ஸ்திரதன்மை ஆகியவற்றை அவர்களின் தலைமைத்துவம் கொண்டுவரும் என நான் நேர்மையாக எதிர்பார்க்கின்றேன்.

அவர்கள் எதிர்கொள்ளும் சவாலகள் மிகவும் கடினமானவை,கடந்தகாலத்தின் படிப்பினைகள்,தங்களிற்கு முன்னர் ஆட்சியிலிருந்தவர்களின் வெற்றி தோல்விகளை அவர்கள் ஆராய்வார்கள் கற்றுக்கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

உண்மையான வெற்றி தேர்தலில் வெல்வது மாத்திரமில்லை மாறாக புத்திசாலித்தனமாக ஆட்சி செய்வது, மக்களின் தேவைகளிற்கு உண்மையாகயிருப்பது என்பதை வரலாறு எங்களிற்கு கற்பித்துள்ளது.

கடந்தகாலங்களில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் தங்களின் வாக்குறுதிகளை கண்டுகொள்ளாமல்,உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதற்கான வாய்ப்பை தவறவிட்டனர்.

திசநாயக்கவும் அவரது குழுவினரும் இந்த தவறிலிருந்து பாடம் கற்கவேண்டும்,