Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஐ.தே.கவின் புதிய தலைவராக ருவான் விஜேவர்தன?

.

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மற்றும் அதன் செயற்பாடுகளிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகுவதாகவும் அதன் தலைமைப் பொறுப்பை ருவான் விஜேவர்தனவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சிக்குள் இந்த மாற்றங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் எனவும் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து அரசியல் இணக்கத்தை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைக்க தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியாக தெரிவித்துள்ளமையால் எதிர்வரும் நாட்களில் அரசியல் இணக்கத்துக்கு தேவையான சூழலை தயார்படுத்தும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீங்கி ருவான் விஜேவர்தனவுக்கு கட்சியின் செயற்பாட்டை நடத்தும் பொறுப்பை வழங்க தயாராகி வருவதாகவும் எனினும் அதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் செய்தி குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை இணைக்கும் கலந்துரையாடல் மூன்று கட்டங்களாக இடம்பெற்றுள்ள நிலையில் இன்றும் அந்த கலந்துரையாடல் நடைபெறும் என உள்ளகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.