Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டொலர் பரிசு!

.

அமெரிக்க (us)ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (elon musk) வெளிப்படையாகவே டொனால்ட் ட்ரம்பை (donald trump) ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ட்ரம்பின் பிரசாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.

தினமும் ஒரு மில்லியன் டொலர் பரிசு
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டொலர் பரிசு அளிக்கப் போவதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்புக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை எலான் மஸ்க் தொடங்கி வைத்தார். மேலும், இந்த கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து இடுபவர்களில் தினமும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசு வழங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் வரை தினமும் ஒரு ட்ரம்ப் ஆதரவாளருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசு வழங்கப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.