Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

600 போராளிகள் எப்படி ஒரு லட்சத்து இருபதாயிரம் ராணுவத்தை எதிர்க்க துணிந்தார்கள்?

.

600 போராளிகள் எப்படி ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்க்க துணிந்தார்கள்?
ஒரு சுருட்டு பற்றவைத்து முடிப்பதற்குள் அந்த சாரம் கட்டிய போய்ஸ் அனைவரையும் இந்திய ராணுவம் முடித்துவிடும் என்று இந்திய தூதர் கூறினார்.
ஆனால் இரண்டரை வருடத்தில் இந்திய ராணுவம் தோல்வியடைந்து வெளியேறிய வரலாறு எப்படி நிகழ்ந்தது?
இதை அறிய விரும்புவோர் இருபது வருடம் போராடி அமெரிக்க ராணுவத்தை வெளியேற்றிய வியட்நாம் தலைவர் ஹோசிமின் கூறிய வரிகளை படிக்க வேண்டும்.
நிருபர் - ஐயா, உங்கள் நாடு ஒரு சிறிய நாடு. உங்கள் எதிரி ஒரு பெரிய, சக்திவாய்ந்த நாடாக இருந்தது. எப்படி நீங்கள் அமெரிக்காவை தோற்கடித்தீர்கள்?
வியட்நாம் தலைவர் ஹோ சிமின் - அமெரிக்கா ஒரு சிறந்த இராணுவம் கொண்ட ஒரு சக்திவாய்ந்த நாடாகும். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை தவறாக புரிந்துகொண்டனர். அவர்கள் வியட்நாம் மக்களின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டனர். வியட்நாம் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள். அவர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அவர்கள் அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தனர். அமெரிக்க இராணுவம் வியட்நாமில் பல வெற்றிகளைப் பெற்றது. ஆனால் அவர்கள் எப்போதும் ஒரு முழுமையான வெற்றியை அடைய முடியவில்லை. வியட்நாம மக்கள் தொடர்ந்து போராடினர். இறுதியில், அமெரிக்க அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவருவது நல்லது என்று முடிவு செய்தது. அவர்கள் வியட்நாம் விட்டு வெளியேறினர். வியட்நாம் மக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றனர். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை வென்றனர்.
நிருபர் - இந்த வெற்றி உங்கள் நாட்டிற்கான என்ன அர்த்தம்?
வியட்நாம் தலைவர் ஹோ சிமின் - இந்த வெற்றி எங்கள் நாட்டின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சிக்கு அர்த்தம். இது எங்கள் மக்களின் வலிமையையும் உறுதியையும் உலகிற்கு காட்டியது. இந்த வெற்றி உலகின் மற்ற மக்களுக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறது. அது என்னவென்றால், எந்த அளவு சக்திவாய்ந்த பகைவராக இருந்தாலும், சுதந்திரத்திற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது.
இந்த உரையாடலில் அமெரிக்க ராணுவம் என்னும் இடத்தில் இந்திய ராணுவம் என்றும் வியட்நாம் மக்கள் என்னும் இடத்தில் ஈழத் தமிழ் மக்கள் என்றும் படித்து பாருங்கள். ஈழத் தமிழர் பெற்ற வெற்றியை உணர முடியும்.
சரி. இப்போது இதை ஏன் கூறவேண்டும் ? இந்தியா பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து தமிழர் விடுதலை பெற முடியாது என்று கூறுபவர்களுக்கு ஹோசிமின் கூறிய வார்த்தை “எந்த அளவு சக்திவாய்ந்த பகைவராக இருந்தாலும், சுதந்திரத்திற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது.”