Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தமிழரசுக் கட்சிக்கு அரசில் இடமில்லை; அமைச்சுப் பதவிகளும் இல்லை!

.

இலங்கைத் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அநுர அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவார்கள் என்ற தகவல்களை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.

அவ்வாறாக தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சி இதுவரையில் எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையயாடலையும் நடத்தவில்லை என்றும், அவ்வாறான தேவை தமக்கு கிடையாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், இதன்படி புதிய அரசாங்கத்தில் எம்.ஏ.சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலைமையிலேயே தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அதனை நிரகரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால், வேறு கட்சிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள தமக்கு அவசியம் கிடையாது என்றும் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்த சுமந்திரன், அரசாங்கம் தமக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க முன்வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.