Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அரசாங்கத்திற்கு எதிராக போராடா வேண்டிய நிலைக்குள் மீனவர்கள் தள்ளப்படுவார்கள்!

.

வடமராட்சி வடக்கு சமாசம் யாழ் . வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். 

இதன் போது கருத்துத் தெரிவித்த நா.வர்ணகுலசிங்கம். நேற்று (23) நீரியல்வளத் துறை அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். 

இதன் போது மீன்பிடி நீரியல்வளம தொடர்பாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களை அமுல்ப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

அத்தோடு நாட்டில் பல திணைக்களம் அரசில்வாதிகள் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கில் நீரயில்வளத் துறை சார்ந்து அரச அதிகாரிகள் முன்னால் அமைச்சர்கள் பல முறைகேடான செயற்பாடுகள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரிந்த விடயமே. 

ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இங்குள்ள சங்கங்கள் சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் முன்னாள் அமைச்சரின் நியமனங்களின் தலைவர்கள் நிருவாகத்தினரே செயற்படுகின்றனர்.

உடனடியாக புதிய நிருவாகத் தெரிவு ஜனநாய ரீதியாக செயற்பட இடமளிக்க ஆவன செய்ய வேண்டும்.

இப்போதுள்ள புதிய அமைச்சர். 

இந்திய மீனர்களது எல்லை தாண்டிய மீன்பிடி மற்றும் எல்லை தாண்டிய மீன்பிடியின் போது கைது நடவடிக்கை இடம்பெறும் போது.

இந்திய மீனவர்கள் தொப்புள்க் கொடி உறவுகள் கடற்படையினர் மீது சுடுதண்ணீர் கொண்டும் மிளகாய்த் தூள் சரைசலை விசிறியும் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

இதனை வண்மையாக கண்டிக்கிறோம்.

உள்ளீர் இழுவைப் படகுகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் இந்திய மீனவர்களது இழுவைமடித் தொழிலை கட்டுப்படுத்த முடியும். 

இந்த அரசும் கடந்த கால அரசாங்கத்தைப் போல் நடக்குமேயாறால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடா வேண்டிய நிலைக்குள் மீனவர்கள் தள்ளப்படுவார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். 

 என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.