Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தென் கொரியாவை உலுக்கிய 12 மணி நேரம்: ராணுவ ஆட்சி திணிக்கப்பட்டு மீண்டும் ரத்து!

.

நேற்று இரவு யாரும் எதிர்பார்க்காதிருந்த நேரத்தில், தென் கொரியா ஒரு வியத்தகு அரசியல் எழுச்சியைக் கண்டது.தென் கொரிய தேசிய சட்டமன்றம், ஜனாதிபதி யூன் சுக் யோலின் இராணுவச் சட்டப் பிரகடனத்தை தீர்மானமாக ரத்து செய்தது.இது நாடு முழுவதும் பரவலான சீற்றம் மற்றும் எதிர்ப்புகளைத் தூண்டியது.அதன் தொடர்ச்சியாக ஒரு அவசர நள்ளிரவு அமர்வில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 300 சட்ட பிரதிநிதிகளில் 190 பேர் ஒருமனதாக இராணுவச் சட்டத்தை நிராகரிக்க வாக்களித்தனர்.யூன் ஆணையை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அது செல்லாது என வாக்களிக்கப்பட்டது.யாரும் எதிர்பார்ககாத ஜனாதிபதி உரையில் அறிவிக்கப்பட்ட இராணுவச் சட்டம், 1980க்குப் பிறகு தென் கொரியாவில் நடைபெறும் முதல் பிரகடனமாகும்.

ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய யூன்

ஜனாதிபதி யூன், இந்த பிரகடனம் அரச-எதிர்ப்பு மற்றும் வட கொரிய சார்புப் படைகளை அகற்றுவதற்குத் தேவையானது என தனது முடிவை நியாயப்படுத்தினார்.தென் கொரியாவின் தேசிய சட்டமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடி, இராணுவச் சட்டத்தை திணிப்பதை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு அத்து மீற முயன்றனர்.இதனால் நேற்று நள்ளிரவில் சியோலில் உள்ள சட்டசபை அருகே பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் தென் கொரியாவின் தற்காப்புக் கட்டளைப் படைகளின் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை அணுக முயற்சியை மேற்கொண்டனர்.சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகள், தேசிய சட்டமன்றத்தின் நுழைவாயிலில் துப்பாக்கிகளுடன் ஹெல்மெட் அணிந்த காவல் அதிகாரிகள் காவலில் நிற்பதைக் காட்டியது.

பிரகடனப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே தென் கொரியாவில் இராணுவச் சட்டம் நீக்கப்பட்டது.

இராணுவ சட்ட விதிகளின் கீழ், அரசியல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும், வாரண்ட்கள் இல்லாமல் கைது செய்யப்படலாம், மேலும் கருத்து வேறுபாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்த உத்தரவு உடனடியாக எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்களிடமிருந்து இருந்து கண்டனத்தை ஈர்த்தன.அறிவிப்பு வெளியான உடனேயே சியோலில் உள்ள தேசிய சட்டமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.சட்டசபைக்குள், எதிர்க்கட்சித் தலைவர்கள், குடியரசுத் தலைவர் அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசியல் சதித்திட்டத்தை ஏற்பாடு செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.இராணுவ சட்ட ஆணையை நிராகரித்து ஒருமனதாக வாக்கெடுப்பில் பேரவையின் அமர்வு உச்சக்கட்டத்தை அடைந்தது.வாக்கெடுப்புக்குப் பிறகு, தேசிய சட்டமன்ற சபாநாயகர் இராணுவச் சட்டம் செல்லாது என்று அறிவித்தார். மாலையில் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த துருப்புக்கள், திரும்பப் பெறப்பட்டன.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வலுக்கும் கண்டனங்கள்

தென் கொரிய சட்டத்தின்படி, பாராளுமன்றம் பெரும்பான்மை வாக்குகளால் இராணுவச் சட்டத்தை நீக்க கோரினால், ஜனாதிபதி உடனடியாக நீக்க வேண்டும்.ஜனாதிபதி யூனின் சொந்தக் கட்சி அவரை ஆணையை நீக்குமாறு வலியுறுத்தியது.முன்னாள் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் கியுங்-வா காங், செவ்வாயன்று ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை இரவு நேரத்தில் அறிவித்ததை "அதிர்ச்சியூட்டுவதாக" விவரித்தார், "நாட்டின் சூழ்நிலையில் எதுவும் அத்தகைய நடவடிக்கையை நியாயப்படுத்தவில்லை" என்று கூறினார்.ஜனாதிபதி யூன் இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்திய பின்னர் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் கர்ட் காம்ப்பெல் "கடுமையான கவலையை" வெளிப்படுத்தினார்.அரசியல் தகராறுகளை அமைதியான முறையில் தீர்த்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.