Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

செய்தி சேகரிக்க சென்ற மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

டக்ளஸ் தேவானந்தாமற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

செய்தி சேகரிக்க சென்ற மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், வாகரை பிரதேச செயலாளர் அருணன், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் தஜீவரன் உட்பட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடமும் கேள்வியெழுப்பப்பட்டது.

எனினும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவ்வாறு ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டிருந்தால் இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தமாட்டோம் என கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

வாகரையில் இல்மனைட் தொழிற்சாலை மற்றும் இரால் வளர்ப்பு பண்ணைக்கு எதிராக வாகரை பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.