Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலி

,

ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஜேர்மனியின் அஸ்காபென்பேர்க் நகரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குழந்தையொன்றை காப்பாற்ற முயன்ற 41வயது நபரும் இரண்டு வயது சிறுவனும் கொல்லப்பட்டதாக ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பூங்காவில் காணப்பட்ட சிறுவர்களை கைதான சந்தேக நபர் இலக்குவைத்ததாகவும்  சந்தேகநபர் அந்த பகுதியில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களிற்கான நிலையத்தில் வசித்தவர் எனவும் கூறப்படுகின்றது.

 அதேவேளை குறித்த நபர் உளவியல் பிரச்சினைகள் உள்ளவர் என மற்றுமொரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர் புகையிரதபாதையூடாக தப்பியோட முயன்றதைதொடர்ந்து அந்த பகுதியின் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டன பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் குடிவரவு கொள்கை குறித்து கடும் விவாதங்கள் ஜேர்மனியின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறுகின்ற சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.