Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தேனிசைத் தென்றல் தேவா இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கானா பாடல்கள், குத்து பாடல்கள், மெலடி பாடல்கள் என்றவாறாக பல குரல்களில் கவர்ந்த இசையமைப்பாளரே தேவா.

தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். 
தன்னுடைய இசைநிகழ்ச்சிக்காகவே அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். நாட்டை வந்தடைந்த இசையமைப்பாளர் தேவாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. 
நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு மலர்க்கொத்தை வழங்கி அவரை வரவேற்றதுடன் கண்டிய நடனம் ஒன்றையும் நிகழ்த்தி அவரை வரவேற்றனர். 

கடந்த 1990 , 2000 ஆம் ஆண்டு ஆரம்பகாலப் பகுதியில் மட்டுமன்றி தற்போது வரை கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளர்களில் முன்னோடியாகத் திகழ்பவரே இசையமைப்பாளர் தேவா. 
பெரியோர், சிறியோர், இளைஞர், யுவதிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தன்னுடைய இரசிகர்களாக்கினார். 
கானா பாடல்கள், குத்து பாடல்கள், மெலடி பாடல்கள் என்றவாறாக பல குரல்களில் கவர்ந்த இசையமைப்பாளரே தேவா. 

உலகம் முழுவதும் பல கோடி இரசிகர்களைக் கொண்ட இவர்இலங்கையில் ஒரு இசைநிகழ்ச்சியை நடத்துவதற்காக இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் அவருடைய மகன் உள்ளிட்ட குழுவினரும் வருகை தந்தனர். 
தனக்கென ஓர் இரசிகர் பட்டாளத்தைக் கொண்ட தேவாவின் இசைநிகழ்ச்சியைக் காண இலங்கை இரசிகர்கள் ஆர்வமாகவும் எதிர்பார்ப்புடனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.