பூநகரி கிராஞ்சி மாணவனுக்கு இளங்குமரன் எம்.பி. வாழ்த்து!
மாணவர்கள் தான் எமது சமூகத்தின் உண்மையான நம்பிக்கையும் எதிர்காலத் தூண்களும் ஆவர்.
பூநகரி கிராஞ்சி மாணவனுக்கு இளங்குமரன் எம்.பி. வாழ்த்து!
கிளிநொச்சி மாவட்ட ரீதியில் வர்த்தகப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று சிறப்புச் சாதனை படைத்துள்ள பூநகரி கிராஞ்சி மாணவனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எம்.பி. தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இம்மாணவன் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், வாழ்க்கையின் பல்வேறு சவால்களையும் கடந்து, கடின உழைப்பும் உறுதியும் கொண்டு இவ்வளவு உயர்ந்த பெறுபேற்றை அடைந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.பொருளாதார குறைபாடுகள், வசதியின்மை, மற்றும் பல தடைகள் இருந்தபோதிலும் கல்வியை மட்டுமே தனது முன்னேற்றப் பாதையாகக் கொண்டு தீவிர முயற்சியால் இச்சாதனையை எட்டியுள்ளார்.
இவ்வாறான மாணவர்கள் தான் எமது சமூகத்தின் உண்மையான நம்பிக்கையும் எதிர்காலத் தூண்களும் ஆவர். அவரின் முயற்சி, உறுதி, மற்றும் கல்வி மீது கொண்ட அர்ப்பணிப்பு இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகிறது.
இந்த மாணவன் எதிர்காலத்தில் பல்கலைக்கழகக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து, அறிவு, ஒழுக்கம், மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட ஒரு சிறந்த நபராக உருவெடுத்து, தமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என இளங்குமரன் எம்.பி. தனது வாழ்த்துக்களுடன் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.


