பசறை நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் விசேட பரிசோதனைகள்!
20க்கும் மேற்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பசறை பிரதேச பொதுச் சுகாதார தலைமை.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பசறை நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனைகளை பசறை, பதுளை மற்றும் லுணுகலை பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.
இதன்போது சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக விற்பனை செய்யப்பட்ட காலாவதியான உணவுப் பொருட்கள், பாவனைக்கு தகுதியற்ற மற்றும் சேதமடைந்த உணவுப் பொதிகள் உள்ளிட்டவை இனங்காணப்பட்டு, அவை பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன. மேலும், சுமார் 20க்கும் மேற்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பசறை பிரதேச பொதுச் சுகாதார தலைமை பரிசோதகர் எம்.ஹெச்.எம். நலிம் தெரிவித்தார். தற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 மற்றும் 24 ஆம் திகதிகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்படவுள்ளனர்.


