"புத்தாண்டுச் சந்தையும் விற்பனைக் கண்காட்சியும் - 2026"
,
"புத்தாண்டுச் சந்தையும் விற்பனைக் கண்காட்சியும் - 2026"
சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் சமுர்த்திப் பிரிவும் இணைந்து நடத்திய புத்தாண்டு விற்பனைச் சந்தை நேற்றைய தினம் (09) சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அமைப்பின் மூலம் பதினைந்து [15] சமுர்த்திப் பயனாளிகளுக்கு 'அருநலு' கடன் கொடுப்பனவாக தலா பத்தாயிரம் ரூபா [10000] வழங்கப்பட்டது.
பிரதேசத்தின் அறுபத்திமூன்று [63] சிறுதொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றிப் பயனடைந்த இந்த விற்பனைக்கூட ஆரம்ப நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்டப் பதிவாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


