கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் ஏனைய பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவி கைது!
9 வீடுகளில் பகல் நேரத்தில் வீடுகளுக்குள் சென்று திருடிய நிலையில் திருடப்பட்ட பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் ஏனைய பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவி கைது!
கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர அவர்களின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மன அவர்களின் ஆலோசனைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க அவரின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் 79718 இலக்கமுடைய ஏக்கநாயக்க, அவர்களின் தகவலின் படி விநாயகபுரம் பகுதியில் வைத்து 24வயதான கணவனும் 20வயதான மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சி உதயநகர் ,அம்பாள் குளம் ,விநாயகபுரம், சாந்தபுரம் கனகாம்பிகைக்குளம் பகுதிகளில் 09வீடுகளில் பகல் நேரத்தில் வீடுகளுக்குள் சென்று திருடிய நிலையில் திருடப்பட்ட பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.10பவுணுக்கு மேற்பட்ட நகைகள் மற்றும் ஏனைய பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.


