Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மே 18 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மர நடுகை!

.

மே 18  அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மர நடுகை 
முள்ளிவாய்க்கால் படுகொலை 17 வது ஆண்டு நினைவேந்தலை( மே 18 ) முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில்  மரநடுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
தமிழ் இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்  ராஜேந்திரன் கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.