யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளி தற்கொலை!
,
யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் (46) யாழ் சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை.
வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமார் இன்று யாழ் சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு. வித்தியா கொடுங்கோலர்களால் குதறப்பட்டு பதினொரு ஆண்டுகளில் அதே மாதத்தில் முதலாவது நீதியின் தீர்ப்பு.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015 மே 13 அன்று கடத்தப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், கொதிநிலையையும் ஏற்படுத்தியது.வழக்கின் முக்கிய விவரங்கள்:தீர்ப்பு: 2017 செப்டம்பர் 27 அன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேல் முறையீடு: தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். இறுதித் தீர்ப்பு: குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரித்த இலங்கை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மே 2026-ல் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமார் இன்று யாழ் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


