Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் அரைமரதன் ஓட்டப் போட்டி சாதனை - தேசிய மட்டத்திற்கும் தெரிவு!

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான அரைமரதன் ஓட்டப் போட்டியில், வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் ஓமந்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி நா.யதுர்ஷிகா மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி, மாகாண மட்டத்தில் 10 ஆம் இடத்தை பெற்றுள்ளார் . இதன் மூலம் அவர் அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதேபோல், இதே போட்டியில் பங்குபற்றிய ஓமந்தை மத்திய கல்லூரியின் மற்றுமொரு வீரரான மாணவன் ச.ததுசாந் போட்டிக்கு மத்தியில் மாகாண மட்டத்தில் 12 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டு தனது திறமையை நிரூபித்துள்ளார்.
மாணவர்களின் இந்த மாகாண மட்ட சாதனைக்கு பின்னால், அவர்களை நெறிப்படுத்தி திறம்பட பயிற்சி அளித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் த.சகிலன் அவர்களின் அயராத உழைப்பும் வழிகாட்டலும் முதன்மைக் காரணியாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மாணவி நா.யதுர்ஷிகாவிற்கும், மாகாண மட்டத்தில் சிறந்த இடத்தை பிடித்த மாணவன் ச.ததுசாந்திற்கும், இவர்களை வழிநடத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் த.சகிலன் மற்றும் அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.