Breaking News
பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்!
,
பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும். கஜேந்திரகுமார் எம்பி கோரிக்கை.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பாசையூரில் வாழ்ந்துவரும் மக்களுக்கு அவர்களது காணிகளுக்கான உரித்து ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் அவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
அவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு ஏற்ற வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு உறுதிகளை உடனடியாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இடம்பெற்ற யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.


