Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தண்டனை பெற்றும் திருந்தாத சிறுவயது காதலர்கள் யாழில் மீண்டும் கைது!

.

 

சிறுவயது காதலர்கள் நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணைகளையடுத்து, இளைஞனுக்கு 3 மாதகால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், சிறுமியை சீர்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு கட்டளையிட்டது.

தண்டனைக் காலம் நிறைவடைந்து, தமது வீடுகளுக்கு திரும்பிய இவ்விருவரும், மீண்டும் தமது வீட்டை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணம் / கோப்பாய் பகுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிஸார் இளைஞனையும் சிறுமியையும் மீண்டும் கைது செய்து, இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.