Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான விவாதம்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் தேசிய மக்கள் சக்தியில் இணைய எதிர்ப்பார்த்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியில் இணையவுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்?

தென்னிலங்கை அரசியலில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அது அரசியலில் பல திசை திருப்பங்களை உருவாக்கி வருகிறது.

அண்மைய தினங்கள் வரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான விவாதம் பேசு பொருளாக அமைந்திருந்தது.

எனினும், தற்போது நாட்டின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் தேசிய மக்கள் சக்தியில் இணைய எதிர்ப்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இணையவுள்ளவர்களின் பட்டியலில் பிரபல்யமானவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குற்றப்புலனாய்வுப் பிரிவின் (CID) ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரவி செனவிரத்ன இதற்கு தலைமை வகிப்பதாக தெரியவந்துள்ளது.

இவருடன் இணைந்து மேலும் சில பொலிஸ் அதிகாரிகளக் தேசிய மக்கள் சக்தியில் இணைய எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிங்ஸ்லி விக்ரமசூரிய , காமினி நவரத்ன, சந்தன அழககோன் ஆகிய சிரேஷ்ட அதிகாரிகளும் தேசிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் தேசிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இணைய எதிர்ப்பார்த்துள்ள அனைவரையும் அழைத்து எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி மஹரகமையில் மாநாடு ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 20 மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.