Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தேர்தலொன்றை சந்தித்தால் நிச்சயம் தோல்வி பெறுவார் என ஜனாதிபதி ரணில். தோல்வி பயத்தை முகமே காட்டிக்கொடுப்பதாக முஜிபூர் ரஹ்மான்.

ரணில் பக்கம் நிற்கும் சிலர் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையை!

ரணிலின் முகத்தில் தோல்வி பயம்!

தேர்தலொன்றை சந்தித்தால் நிச்சயம் தோல்வி பெறுவார் என ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவுக்கு தெரியும். தோல்வி பயத்தை அவரது முகமே காட்டிக்கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் நிற்கும் சிலர் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையை முன்வைத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் மற்றும் தவிசாளர் உட்பட பலர் அந்த யோசனையை ஊக்குவிக்கின்றனர்.

இந்த கருத்து ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியன் பின்னர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார், தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று.

இவற்றிலிருந்து எங்களுக்கு தெளிவாக ஒன்று புரிகின்றது. ஜனாதிபதி மற்றும் ராஜபக்சர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஒரு முரண்பாடு காணப்படுகின்றது.

தேர்தலை ஒன்றை சந்தித்தால் ஏற்படும் தோல்வி பயத்தை அவரின் முகம் காட்டிக்கொடுக்கின்றது. இவற்றிலிருந்து எதிர்வரும் தேர்தலில் அவர்கள் நிச்சயம் தோல்வி பெறுவார்கள் என்பது தெளிவாகின்றது.

இந்த தோல்வியை அறிந்தே அவர்கள் தேர்தல் காலத்தை நீடிப்பதற்கான வழிமுறைகளை தேடுகின்றனர். அதற்காக தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஜனாதிபதிக்காக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள மதிப்பீடுகள் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய வேண்டும்.

8,750 மில்லியன் ரூபா ஜனாதிபதி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எந்தவொரு நிதியிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டுமா என்றும் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்புகிறார்.